என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

1950களில் புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படமாவது ஒரு டிரண்டாக இருந்தது. அப்படி திரைப்படமாக உருவான ஒரு நாடகம் 'என் தங்கை'. டி.எஸ்.நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. கண்பார்வை இல்லாத தன் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகங்கள்தான் கதை. இந்த நாடகத்தில் அண்ணன் கேரக்டரில் சிவாஜி நடித்தார்.
இந்த நாடகம் 1952ம் ஆண்டு திரைப்படமாக தயாரானபோது அதே அண்ணன் கேரக்டரில் நடித்தது எம்ஜிஆர். அவருடன் பி.வி.நரசிம்ம பாரதி, மாதுரிதேவி, பி.எஸ்.கோவிந்தன், எம்.ஜி.சக்ரபாணி, ஈ.வி.சரோஜா மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோரும் நடித்தார்கள்.
நாராயணமூர்த்தி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு 'சோட்டி பெஹன்' என்ற பெயரில் ஹிந்தியிலும், 'ஆட பாடுச்சு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'ஒன்டே பால்யா ஹோகலு' என்ற பெயரில் கன்னடத்திலும், 'புனீர் மிலனா' என்ற பெயரிலும் ஒடிசாவில் ரீமேக் ஆனது.