ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

1950களில் புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படமாவது ஒரு டிரண்டாக இருந்தது. அப்படி திரைப்படமாக உருவான ஒரு நாடகம் 'என் தங்கை'. டி.எஸ்.நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. கண்பார்வை இல்லாத தன் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகங்கள்தான் கதை. இந்த நாடகத்தில் அண்ணன் கேரக்டரில் சிவாஜி நடித்தார்.
இந்த நாடகம் 1952ம் ஆண்டு திரைப்படமாக தயாரானபோது அதே அண்ணன் கேரக்டரில் நடித்தது எம்ஜிஆர். அவருடன் பி.வி.நரசிம்ம பாரதி, மாதுரிதேவி, பி.எஸ்.கோவிந்தன், எம்.ஜி.சக்ரபாணி, ஈ.வி.சரோஜா மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோரும் நடித்தார்கள்.
நாராயணமூர்த்தி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு 'சோட்டி பெஹன்' என்ற பெயரில் ஹிந்தியிலும், 'ஆட பாடுச்சு' என்ற பெயரில் தெலுங்கிலும், 'ஒன்டே பால்யா ஹோகலு' என்ற பெயரில் கன்னடத்திலும், 'புனீர் மிலனா' என்ற பெயரிலும் ஒடிசாவில் ரீமேக் ஆனது.