ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.
ஆனால், மார்க்கெட் பீக்கில் இருந்த நேரத்தில் திடீரென ஒருநாள் சில்க் இறந்து விட்டார். அவரது இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் அப்போது எழுந்தது. ஆனால், தற்கொலையாகவே முடிக்கப்பட்டது. இந்த நிலையில், சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வெளியாகின, அந்த படங்களில் வித்யாபாலன், சனாகான் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆனால், சில்க்ஸ்மிதாவின் ஜெராக்ஸ் போன்று இருக்கும் ஜூனியர் பிந்துமாதவியை மறந்தே விட்டார்கள். அதுதான் பிந்துமாதவிக்கு பெரிய வருத்தமாக உள்ளதாம். மேலும், அடுத்து சில்க் பாணியில் யாராவது படம் பண்ணினால் அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்பேன் என்று கூறிவரும் பிந்துமாதவி, இனிமேல் குடும்ப நடிகை என்கிற முத்திரையை கழட்டி எறிந்து விட்டு, சில்க்ஸ்மிதா போன்று கிளாமர் நாயகியாகவும் அவதரிக்கப்போகிறாராம்.