போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஜினியின் குசேலன் படத்திற்கு பிறகு பாலாவின் பரதேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி, விஜய்யின் தலைவா என முன்னணி இயக்குனர், நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இப்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக பாடகி சைந்தவியை காதலித்து வந்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். அவரது இசையில் சைந்தவி நிறைய பாடல்கள் பாடியதை அடுத்து அவர்களின் காதல் இன்னும் உறுதியானது. இதையடுத்து அவர்களின் பெற்றோருக்கும் காதல் தெரிந்தபோது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நேற்று சென்னையில் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் செட்டியார் மண்டபத்தில் காலை 10 மணி அளவில் மணமகள் சைந்தவியின் கழுத்தில், பிரகாஷ்குமார் தாலி கட்டினார். அப்போது அனைவரும் மலர்தூவி மணமக்களை மனதார வாழ்த்தினர். இதையடுத்து திரையுலகின் முன்னணி ஜாம்பவான்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் நேற்று மாலை அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.