மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை |
பழம்பெரும் தயாரிப்பாளர் மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில், பல படங்களைத் தமிழில் தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அதில் ஒன்று 'சர்வாதிகாரி'. 'தி கேலன்ட் பிளேட்' என்ற அமெரிக்க படத்தைத் தழுவி தமிழில் உருவானப் படம்.
எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எம்.என்.நம்பியார், வி.நாகையா, புளிமூட்டை ராமசாமி, எஸ்.சரோஜா, எஸ்.ஆர்.ஜானகி, கருணாநிதி, வி.கே.ராமசாமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் 25வது படம். இந்தப் படத்துக்கு முதலில் வசனம் எழுத இருந்தவர் கருணாநிதி. மாடர்ன் தியேட்டர்ஸின் முந்தைய படமான எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' சூப்பர் ஹிட்டானதால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் கருணாநிதி அரசியலில் பிசியாகி விட்டதால் ஆசைத்தம்பி எழுதினார்.
தனது 25வது படம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். படத்திற்கு முதலில் 'போர்வாள்' என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தலைப்பு புதுமையாக இல்லை என்பதற்காக எம்ஜிஆர் 'சர்வாதிகாரி' என்ற பெயரை சிபாரிசு செய்தார். அதனை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டார்.
இந்தப் படத்தின் ஆக்ரோஷமான கத்திச் சண்டைகள் அப்போது அதிகம் பேசப்பட்டன. டூப் போடாமல் எம்ஜிஆர் முறைப்படி வாள் பயிற்சி பெற்று சண்டை காட்சியில் நடித்தார். தட்சிணாமூர்த்தி இசை அமைத்திருந்தார். இந்த படம் திரையிட்ட தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. திருச்சியில் மட்டும் 141 நாட்கள் ஓடியது.