தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

1970-80களில் மலையாள சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக இருந்தவர் ரவீந்திரன். ஆரம்பத்தில் மேடை கச்சேரிகளில் பாடிவந்த இவர், சினிமா இசை அமைப்பாளராக விரும்பினார். வாய்ப்பு தேடியதில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் டப்பிங் கலைஞர் ஆனார். அப்போதைய முன்னணி நடிகரான ரவிகுமாரின் படங்கள் அனைத்திற்கும் அவரே டப்பிங் பேசினார். தமிழில் மோகனுக்கு குரல் கொடுத்த எஸ்.என்.சுரேந்தர் போன்று இவர் ரவிகுமாருக்கு குரல் கொடுத்தார்.
இந்த டப்பிங் குரலால் ஈர்க்கப்பட்டு இயக்குனர் பரதன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் பாடகர் ஜேசுதாசின் நட்பு கிடைத்தது. அவரது சிபாரிசின் பேரில் பல வாய்ப்புகள் வந்தது. மலையாளத்தில் ஜேசுதாஸ் அதிகம் பாடியது இவரது இசை அமைப்பில்தான். பின்னர் 450 மலையாள படங்களுக்கும், ஹேமாவின் காதலர்கள் உள்ளிட்ட 6 தமிழ் படங்களுக்கும் இசை அமைத்தார்.