ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

‛மோகமுள்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிஷேக். தமிழில் நடித்த படங்கள் குறைவு தான், ஆனால் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக கோலங்கள், செல்லமே போன்ற டிவி தொடர்கள் இவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து படங்கள், சீரியல்களில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛எனது போனுக்கு இ-சலான் ஒன்று வந்தது. நானும் ஏதோ டிராபிக் விதிமீறல் என்று நினைத்து பதட்டத்தில் அந்த லிங்க்கை கிளிக் செய்துவிட்டேன். பின்னர் எனது வாட்ஸ் அப் ஹேக் ஆகிவிட்டது. அதில் ஆந்திர போலீஸ் வாசகத்துடன் இடம் பெற்று இருந்தது. இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தேன். இதுபோன்ற இ-சாலன் மூலம் மர்ம நபர்களால் ஹேக்கிங் முறைகேடு நடப்பதாக தெரிவித்தனர். ஆகவே இதுபோன்ற லிங்க் வந்தால் கவனமுடன் கையாளுங்கள்'' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூடிய எச்சரிக்கையை அபிஷேக் தெரிவித்துள்ளார்.