மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
‛மோகமுள்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிஷேக். தமிழில் நடித்த படங்கள் குறைவு தான், ஆனால் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக கோலங்கள், செல்லமே போன்ற டிவி தொடர்கள் இவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து படங்கள், சீரியல்களில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛எனது போனுக்கு இ-சலான் ஒன்று வந்தது. நானும் ஏதோ டிராபிக் விதிமீறல் என்று நினைத்து பதட்டத்தில் அந்த லிங்க்கை கிளிக் செய்துவிட்டேன். பின்னர் எனது வாட்ஸ் அப் ஹேக் ஆகிவிட்டது. அதில் ஆந்திர போலீஸ் வாசகத்துடன் இடம் பெற்று இருந்தது. இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தேன். இதுபோன்ற இ-சாலன் மூலம் மர்ம நபர்களால் ஹேக்கிங் முறைகேடு நடப்பதாக தெரிவித்தனர். ஆகவே இதுபோன்ற லிங்க் வந்தால் கவனமுடன் கையாளுங்கள்'' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூடிய எச்சரிக்கையை அபிஷேக் தெரிவித்துள்ளார்.