இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
‛மோகமுள்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிஷேக். தமிழில் நடித்த படங்கள் குறைவு தான், ஆனால் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக கோலங்கள், செல்லமே போன்ற டிவி தொடர்கள் இவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து படங்கள், சீரியல்களில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛எனது போனுக்கு இ-சலான் ஒன்று வந்தது. நானும் ஏதோ டிராபிக் விதிமீறல் என்று நினைத்து பதட்டத்தில் அந்த லிங்க்கை கிளிக் செய்துவிட்டேன். பின்னர் எனது வாட்ஸ் அப் ஹேக் ஆகிவிட்டது. அதில் ஆந்திர போலீஸ் வாசகத்துடன் இடம் பெற்று இருந்தது. இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தேன். இதுபோன்ற இ-சாலன் மூலம் மர்ம நபர்களால் ஹேக்கிங் முறைகேடு நடப்பதாக தெரிவித்தனர். ஆகவே இதுபோன்ற லிங்க் வந்தால் கவனமுடன் கையாளுங்கள்'' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூடிய எச்சரிக்கையை அபிஷேக் தெரிவித்துள்ளார்.