ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

இன்றைய காலகட்டத்தில் திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இன்ஸ்டாகிராம், எக்ஸ் கணக்குகளை தவறாது பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். ஆனால் சில விஷமிகள் அவ்வப்போது இது போன்ற பிரபலங்களின் சோசியல் மீடியா கணக்குகளை ஹேக் செய்து அவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதுடன் அவர்களை தவறாக நினைக்கும் விதமாக பல செய்திகளையும் தங்கள் இஷ்டம் போல வெளியிடுகின்றனர். அவ்வப்போது இது நடைபெறுவது உண்டு. இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை அலர்ட் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இருப்பவை நான் பதிவிட்டது அல்ல. அதனால் நான் அந்தப் பக்கத்திற்கு மீண்டும் திரும்பி வரும் வரை யாரும் அந்த பக்கத்தில் பதில் கருத்து போட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அது ஹேக் செய்யப்படவில்லை என்றாலும் கூட, அந்த சமயத்தில் தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்று சில நாட்கள் வரை அதை பயன்படுத்த முடியாமல் சிரமங்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன்.