2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தங்கலான் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் வேட்டுவம். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது அதில் நடித்த ஸ்டன்ட் மேன் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் நடித்தபோது இது நிகழ்ந்துள்ளது. அதையடுத்து அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு அருமையான விஷயத்தை செய்துள்ளார். அது என்னவென்றால், நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டன்ட் நடிகர்களுக்கு அவர் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா வட்டாரங்களில் இருந்து நடிகர் அக்ஷய் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.