அதிமுகவுக்கு தலைமை ஏற்க நினைத்தேனா? இயக்குனர் கே .பாக்யராஜ் விளக்கம் | பாடலாசிரியர் சினேகன் தந்தை 102 வயதில் காலமானார் | ‛ஆண்பாவம் பொல்லாதது' பெண்களுக்கு எதிரான படமல்ல: ரியோ ராஜ் | இரண்டரை மணிநேர மேக்கப் ; ஜி.டி.நாயுடுவாக மாதவன் லுக் வெளியீடு | சஞ்சய் லீலா பன்சாலியுடன் சந்திப்பு ; ஹிந்தியில் நுழைகிறாரா சிவகார்த்திகேயன்? | பாகுபலியால் ஒரு நாள் தள்ளிப்போகும் ரவிதேஜாவின் 'மாஸ் ஜாதரா' ரிலீஸ் | இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! |

தங்கலான் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் வேட்டுவம். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது அதில் நடித்த ஸ்டன்ட் மேன் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் நடித்தபோது இது நிகழ்ந்துள்ளது. அதையடுத்து அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு அருமையான விஷயத்தை செய்துள்ளார். அது என்னவென்றால், நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டன்ட் நடிகர்களுக்கு அவர் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா வட்டாரங்களில் இருந்து நடிகர் அக்ஷய் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.