மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பான் இந்தியத் திரைப்படம் 'குபேரா'. இப்படத்தைத் தமிழ், தெலுங்கில் உருவாக்கி, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
தெலுங்கில் மட்டுமே இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் குறிப்பாக தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா வெளியீட்டிற்குப் பின்பு அளித்த ஒரு பேட்டியில், “தமிழ் ரசிகர்களிடம் 'குபேரா' அதிக வரவேற்பைப் பெறும் என்று நான் நம்பினேன். அவர்களின் உணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு படத்தில் பல அம்சங்களை நாங்கள் வடிவமைத்தோம். படத்தின் நாயகனாக தனுஷ் நடித்ததால் அவர்களிடம் அந்த உணர்வு வலுவாக இணையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த முடிவு எதிர்பாராதது,” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தனுஷின் 5வது 100 கோடிப் படமாக 'குபேரா' அமைந்தாலும், அதில் சுமார் 20 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூலித்துள்ளதாம். தெலுங்கு மாநிலங்களில் 55 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், ஹிந்தியில் 2 கோடியும், கேரளாவில் ஒரு கோடியும், வெளிநாடுகளில் 28 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், ஹிந்தி இரு மொழிகளிலும் இந்தப் படத்தை உரிய விதத்தில் கொண்டு போய் சேர்க்கவில்லை என்பது தனுஷ் ரசிகர்களின் கமெண்ட்டாக உள்ளது. தமிழில் 100 கோடி வரையிலும் வசூலித்திருக்கலாம் என்பது இங்குள்ள திரையுலகினரின் கருத்தாகவும் இருக்கிறது. தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் தெலுங்குத் திரையுலகத்தில் பிரபலமானவர்கள். அதனால், அங்கும் இந்தப் படம் நிறையவே வசூல் செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.