கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தற்போது கண்ணப்பா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கதை.
இந்த படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் பெண் கடவுளாகவும், பிரீத்தி முகுந்தன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று விஷ்ணு மஞ்சுவின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். படம் தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்திலுள்ள விஷ்ணுவின் இரண்டு அலுவலகங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே விஷ்ணுவிடம் இன்று விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய விஷ்ணு '' என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. படம் வெளியாகும் நிலையில் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டாம்'' என்றார்.