மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! | பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான ஆடியோ | துாக்கம் இல்லாமல் தவிக்கும் ஸ்டார்கள் | பெரிய பட்ஜெட் படங்களை தவிர்க்கும் கமல்ஹாசன் | 'யாதும் அறியான்' ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம | டிரண்டிங்: ரீல் வீடியோவால் சீரழியும் தம்பதிகளின் கதை | 'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம் | தமிழில் 'எப் 1': நாளை வெளிவருகிறது |
1966ம் ஆண்டு வெளியான 'சரஸ்வதி சபதம்' படம் ஏ.பி.நாகராஜனின் வெற்றி படங்களில் ஒன்று. சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா என பலர் நடித்திருந்தார்கள். கிராமங்களில் சொல்லப்படும் நாட்டார் வழி கதைதான் இது.
கல்வி கடவுள் சரஸ்வதி, செல்வத்தின் கடவுள் லட்சுமி, வீரத்தின் கடவுள் பார்வதி மூவருக்கும் யார் பெரியவர் என்ற சண்டை வரும். இதற்காக அவர்கள் பூமியில் மனிதர்களை தேர்ந்தெடுத்து தங்கள் சக்தியை வழங்குவார்கள், எந்த மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறானோ அந்த சக்தியை கொண்ட கடவுளே பெரியவர் என்ற போட்டி நடப்பதுதான் படத்தின் கதை.
1951ம் ஆண்டு வெளிவந்த 'கலாவதி' என்ற படத்தின் கதையும் இதுதான். கல்வி கடவுளான சரஸ்வதிக்கும் செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கும் போட்டி வரும், பூமியில் ஒரு விவசாயியை தேர்வு செய்து லட்சுமி அவனுக்கு தங்க கட்டிகளை கொடுப்பார், சரஸ்வதி கல்வியை கொடுப்பார். இறுதியில் வெற்றி பெற்றது தங்க கட்டியாக, கல்வியா என்பதுதான் படத்தின் கதை.
எல்.எஸ்.ராமச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் டி.எஸ்.துரைராஜ், டி.ஏ.ஜெயலட்சுமி நடித்திருந்தனர். எம்.எஸ்.ஞானமணி தயாரித்திருந்தார். வின்ஸ்டர் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்தது. கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஸ்டார் ஸ்டூடியோவில் முழு படமும் தயாரானது.