தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! |

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இன்று வெளியான படம் 'சித்தாரே ஜமீன் பர்'. கடந்த 2007ல் அமீர்கான் நடித்து இயக்கி வெளியான 'தாரே ஜமீன் பர்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஆர் எஸ் பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான், சித்தாரே ஜமீன் பர் படக்குழுவினரை அவர்களது செட்டுக்கு நேரில் வந்து சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இவர்கள் மூவருமே எந்தவித பந்தாவும் ஈகோவும் இன்றி ஒருவரது படத்தை மற்றொருவர் பாராட்டுவதுடன் அவர்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதை ஷாருக்கான் இப்போதும் நிரூபித்துள்ளார்.