சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

'கரகாட்டக்காரன்' படத்தில் காமெடி மூலம் புகழ் பெற்றவர் சொப்பன சுந்தரி. திரையில் தோன்றாத அந்த கேரக்டரை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் யார் சொப்பன சுந்தரி தெரியுமா? நடிகை அஞ்சலி தேவி.
1950ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் 'சொப்பன சுந்தரி' பிரதிபா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கன்டசாலா பலராமையா தயாரித்து, இயக்கினார். இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி நடித்திருந்தனர். சி.ஆர்.சுப்புராமன் மற்றும் கன்டாசாலா இணைந்து இசையமைத்திருந்தார்கள்.
ஒரு நாட்டின் இளவரசனின் கனவில் அடிக்கடி ஒரு அழகான பெண் வந்து செல்கிறாள். கனவிலேயே அவளை காதலிக்கும் இளவரசன் அவளை தேடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறான். இறுதியாக அவளை கண்டுபிடிக்கிறான், காதலிக்கிறான் திருமணம் செய்யப் போகும்போது தான் தெரிகிறது அவள் வான லோகத்து தேவதை என்று.
வானலோகச் சட்டப்படி தேவதை ஒரு மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால் சிக்கல் வருகிறது. இதையும் மீறி இருவர் திருமணம் எப்படி நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இளவரசனின் சொப்பனத்தில் வந்த சுந்தரி என்பதால் படத்தின் டைட்டில் 'சொப்பன சுந்தரி' என்று வைக்கப்பட்டது. இளவரசனாக நாகேஸ்வரராவும், சொப்பன சுந்தரியாக அஞ்சலிதேவியும் நடித்தனர். பின்னர் இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.