சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் | விருஷபா டப்பிங்கை முடித்த மோகன்லால் | ஜப்பானிய பாரம்பரிய உடை அணிந்து ஜப்பான் சாலைகளில் வலம் வந்த மஞ்சு வாரியர் | முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி | ஒரே நேரத்தில் ரஜினி விஜய் படங்களில் நடித்த இரட்டிப்பு சந்தோஷத்தில் மோனிஷா பிளஸ்சி | விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை |
தமிழ் சினிமாவில் மதமாற்றம், அதன் பின்னணி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய கதைகள் வெகு குறைவு. தமிழகத்தில் இப்படிப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பு வரும். அரசின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும், பல அமைப்புகள் கொடி பிடிக்கும் என்பதால் அதை கையில் எடுக்க பலர் தயங்கினார்கள். ஆனால், இசக்கி கார்வண்ணன் இந்த பிரச்னையை மையமாக வைத்து பரமசிவன் பாத்திமா படத்தை எடுத்து இருக்கிறார்.
பரமசிவனாக நடிகர் விமலும், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய குடும்பத்தை சேர்ந்த பாத்திமாவாக சாயாதேவியும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் கொல்லப்பட, ஆவியாகி என்ன செய்கிறார்கள் என்பது கதை. பாத்திமா தந்தையாக நடித்த இயக்குனர் மனோஜ்குமார் ஆசிரியர் வேலைக்கு ஆசைப்பட்டு மதம் மாறுகிறார். திருச்சபை செல்கிறார். ஆனால், மேளச்சத்தம் கேட்டால், வெள்ளி செவ்வாய் என்ற பழசை மறக்க முடியாமல் வீட்டில் நான் சுடலை வந்து இருக்கேன் என்று சாமி ஆடுகிற காட்சியும் படத்தில் இடம் பிடித்துள்ளது.
மத மாற்றம் சம்பந்தப்பட்ட பல வசனங்களும் இடம் பிடித்துள்ளது. பல வசனங்கள் சென்சாரால் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சேரன் நடித்த, ஜாதி கொடுமையை சொல்லும் தமிழ்குடிமகன் படத்தை இயக்கியவர் இசக்கி கார்வண்ணன்.