தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்ல திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக என்ட்ரி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன். அதையடுத்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, பதிலுக்கு ரவி மோகனும் அவருக்கு அறிக்கை வெளியிட பரபரப்பு நீடித்து வந்தது. பின்னர் நீதிமன்றம் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளக்கூடாது என்று தடை போட்டது. அப்போது தனக்கு ஒரு மாதத்திற்கு 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கை வைத்தது விவாதங்களை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், தற்போது ரவி மோகனும், கெனிஷாவும் குன்றக்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். அப்போது தங்களது கழுத்தில் மாலையுடன் ரவி மோகனும், கெனிஷாவும் கோவில் பூசாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.