மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்ல திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக என்ட்ரி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன். அதையடுத்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, பதிலுக்கு ரவி மோகனும் அவருக்கு அறிக்கை வெளியிட பரபரப்பு நீடித்து வந்தது. பின்னர் நீதிமன்றம் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளக்கூடாது என்று தடை போட்டது. அப்போது தனக்கு ஒரு மாதத்திற்கு 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கை வைத்தது விவாதங்களை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், தற்போது ரவி மோகனும், கெனிஷாவும் குன்றக்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். அப்போது தங்களது கழுத்தில் மாலையுடன் ரவி மோகனும், கெனிஷாவும் கோவில் பூசாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.