பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
இசையமைப்பாளர் இளையராஜா தனது 83வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை, தி.நகரில் உள்ள ஸ்டூடியோவிலும், வீட்டிலும் திரளான ரசிகர்கள், சினிமாகாரர்கள், விஐபிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அவருக்கு நேற்று 83வது பிறந்தநாள் என்பதால் பலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ஸ்டூடியோ வாசலில் நின்று அவர் பாடல்களை பாடினர். இன்றைக்கு முன்னணி நடிகர்கள் தொடங்கி சின்ன நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமாகாரர்கள் என அனைவரிடமும் சோஷியல் மீடியா கணக்கு உள்ளது. ஆனால், நேற்றைக்கு பல முன்னணி நடிகர்கள், இளையராஜாவுடன் பணியாற்றவர்கள் , அவர் இசையில் பாடியவர்கள், அவரால் உயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்தவர்கள் என ஒரு தரப்பினர் அவருக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாக்களில் சீனியர்களை கொண்டாடுகிறார்கள். தமிழில் 80 வயதை தொட்ட ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். ஆனால், அவர் பிறந்தநாளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் கூட பலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது இளையராஜாவுக்கு நெருக்கமானர்களின் ஆதங்கமாக இருக்கிறது.