சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மதராஸி படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை இயக்க முருகதாஸ் சென்று விட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதே, சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் தற்போது பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதராஸி படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மதராஸி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .




