தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் | கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏஎம் ரத்னம். தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள அப்படத்தை அவரது மகன் ஜோதி கிருஷ்ணாவும் இயக்கியுள்ளார்.
நேற்று முன்தினம் தான் சென்னையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போதும் கூட தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் கலந்து கொண்டு நீண்ட நேரம் பேசினார்.
இதனிடையே, தயாரிப்பாளர் ரத்னம் சுயநினைவு இழந்துவிட்டார் என வதந்தி பரவியது. அதற்கு ரத்னத்தின் தம்பி தயாகர ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “அண்ணன் ஏஎம் ரத்னம் சுயநினைவு இழந்துள்ளதாகப் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் தான் இருக்கிறார். இது போன்ற தகவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகத்தில் அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ஸ்டிரைக், பவன் கல்யாண் தரப்பிலிருந்து தெலுங்கு திரையுலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம் ஆகியவை கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வதந்தியையும் யாரோ வேண்டுமென்றே பரப்பியுள்ளதாகத் தெரிகிறது.