என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஆந்திர துணை முதல்வரான பவன்கல்யாண் நடிக்கும் ஹரிஹர வீரமல்லு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 12ல் வெளியாகிறது. முதலில் இந்த படத்தை கிரிஷ் இயக்கினார். பல பிரச்னைகளால் படப்பிடிப்பு இழுக்க, மீதி படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகனான ஜோதி கிருஷ்ணா முடித்தார். இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசையமைத்து இருக்கிறார். இதில் ஹீரோவான பவன் கல்யாண் 'கேட்கணும் குருவே' என்ற தமிழ் பாடலை தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
தெலுங்கில் இப்போது அதிகமாக தத்துவ பாடல் வருவது இல்லை. பவன்கல்யாண் அரசியலிலும் இருப்பதால் இந்தவகையில் தத்துவ பாடலை அவர் பாடியிருக்கிறார். தவிர, குடிக்கு ஆதரவான சில வசனங்களை அவர் பேச மறுத்துவிட்டாராம். நான் துணை முதல்வராக இருப்பதால் அப்படி பேச முடியாது என மறுத்ததுடன், ஒரு பாடல் காட்சியிலும் சில சர்ச்சை வரிகளை நீக்க சொல்லியிருக்கிறாராம். முகலாய மன்னர் அவுரங்க சீப்பை எதிர்த்து போராடுகிற அல்லது அவர் ஆதரவாளர்களிடம் இருந்து ஒரு விஷயத்தை பாதுகாக்கிற கேரக்டரில் நடிக்கிறாராம். ஐதராபாத், சென்னையை தொடர்ந்து இந்த படத்தில் அடுத்த கட்ட நிகழ்ச்சி விரைவில் திருப்பதியில் நடக்க உள்ளது. அதில் பவன்கல்யாண் கலந்து கொண்டு படம் குறித்து பேச உள்ளாராம்.