நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இவர் படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆனார். இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக அவருடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இன்னொரு பக்கம் சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் போதைப் பொருள் கடத்தி கைதான நபர்கள் அளித்த வாக்குமூலத்தில் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இன்னொரு நடிகரான ஸ்ரீநாத் பாஷி இருவருக்கும் தாங்கள் போதைப்பொருள் சப்ளை செய்து வருவதாக வாக்குமூலத்தில் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு ஜாமினில் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். தற்போது அங்கே சிகிச்சை பெற்று வரும் ஷைன் டாம் சாக்கோ, சமீபத்தில் ஒரு யுடியூப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்,
இதில் அவர் கூறும்போது, “யாரையும் நம்பக்கூடாது என என் பெற்றோர் கூறுவார்கள். ஆனால் நான் நம்பிக்கையை தான் முக்கியமாக கருதினேன். அதன் மூலம் இந்த போதை பொருள் பழக்கமும் சேர்ந்து கொண்டது. பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோன்று போதைப் பொருள் பயன்படுத்திய போது அந்த சமயத்தில் என் பெற்றோர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டனர்.. எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் என்னை பார்த்து என் தந்தை முதன்முதலாக கதறி அழுதது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
வெளிநாட்டில் வசிக்கும் என் தங்கைக்கு கூட எனது செயலால் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதேசமயம் போதைப்பொருள் நான் பயன்படுத்தினாலும் கூட அதன் மூலம் யாரையும் துன்பப்படுத்தியதில்லை. என்னை, என் உடலை, என் மனதை மற்றும் என் குடும்பத்தை வேண்டுமானால் நான் துன்புறுத்தி இருக்கிறேன் என ஒப்புக்கொள்வேன். எனக்காக இந்த பழக்கத்தை விட வேண்டும் என்றால் கூட யோசித்து இருப்பேன். ஆனால் என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற இந்த பழக்கத்தை அடியோடு கைவிட போகிறேன்” என்று கூறியுள்ளார்.