தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் |
போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் சைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ்', சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே இவர் கைதானார். சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர்கள் சைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி என்கிற இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதை பொருள் சப்ளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
மேலும் மலையாள நடிகையான வின்சி அலோசியஸ் என்பவரும் சைன் டாம் சாக்கோ போதை பொருள் பயன்படுத்திவிட்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் அத்துமீறியதாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி சாக்கோவிடம் விசாரிக்க போலீசார் கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிய சிசிடி காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் எர்ணாகுளம் போலீசார் சாக்கோவிடம் நான்கு மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் கொச்சி போலீசார் அவரை கைது செய்தனர்.