பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் | தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் கன்னட ஹீரோயின்கள் |
விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கிய பகுதிகளின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைபகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சென்றார். தாண்டிக்குடி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
நேற்று 3வது நாளாக தகவுமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் வரை கரடு முரடான மலை பாதையில் ஜீப்பில் பயணம் செய்த விஜய் அதன்பிறகு பாதை இல்லாத காரணத்தால் ஜீப்பில் இருந்து இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே படப்பிடிப்புக்கு சென்றார்.
அங்கிருந்து தகவுமலை நாதன் சிவன் கோவிலை அடைந்த அவர், சிறிது நேரம் கோவிலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பை முடித்து மீண்டும் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து, பின்னர் ஜீப்பில் தாண்டிக்குடி திரும்பினார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் விஜய் இன்று சென்னை திரும்பினார்.
இந்த பயணத்தின்போது வழிநெடுகிலும் மலைக்கிராம மக்கள் விஜயை காண திரண்டிருந்தனர். அப்போது திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி விஜய் கையசைத்து சென்றார். தாண்டிக்குடி அருகே பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.