2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கிய பகுதிகளின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைபகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சென்றார். தாண்டிக்குடி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
நேற்று 3வது நாளாக தகவுமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் வரை கரடு முரடான மலை பாதையில் ஜீப்பில் பயணம் செய்த விஜய் அதன்பிறகு பாதை இல்லாத காரணத்தால் ஜீப்பில் இருந்து இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே படப்பிடிப்புக்கு சென்றார்.
அங்கிருந்து தகவுமலை நாதன் சிவன் கோவிலை அடைந்த அவர், சிறிது நேரம் கோவிலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பை முடித்து மீண்டும் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து, பின்னர் ஜீப்பில் தாண்டிக்குடி திரும்பினார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் விஜய் இன்று சென்னை திரும்பினார்.
இந்த பயணத்தின்போது வழிநெடுகிலும் மலைக்கிராம மக்கள் விஜயை காண திரண்டிருந்தனர். அப்போது திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி விஜய் கையசைத்து சென்றார். தாண்டிக்குடி அருகே பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.




