இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
இந்திய அளவில் திரையுலக வசூலை 1000 கோடி என அசத்தலாக தூக்கி நிறுத்திய படங்களாக தென்னிந்தியப் படங்களான 'பாகுபலி 2, கேஜிஎப் 2, கல்கி 2898 எடி, புஷ்பா 2' ஆகிய படங்கள் அமைந்தன. அப்படங்கள் வழக்கமான படங்களை விடவும் மாறுபட்ட பிரம்மாண்டமான படங்களாக இருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அப்படியான படங்கள் பற்றி வேவ்ஸ் 2025 மாநாட்டில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. “'புஷ்பா 2' போன்ற படங்கள் தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே அதிக வசூலைக் குவித்தது. பெரிய திரையில் வெளிப்படும் மாயாஜாலத்தை அனுபவிப்பதற்காக 'புஷ்பா, கேஜிஎப், பாகுபலி' போன்ற படங்களை 100ல் 90 பேர் பார்க்கிறார்கள். புஷ்பா ராஜ், ராக்கி பாய், பாகுபலி போன்ற இயல்புக்கு மீறிய ஹீரோக்களைப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். தனிப்பட்ட விதத்தில் நானும் அத்தகைய படங்களையும் ஹீரோக்களையும் பார்க்க விரும்புகிறேன்.
அனைத்து படங்களும் ஹீரோ கதாபாத்திரங்களால் மட்டுமல்லாது வலுவான உள்ளடக்கத்தாலும் வெற்றி பெற்றுள்ளன. ராஜமவுலி கூட 'பாகுபலி' படத்தைத் தெலுங்கில்தான் உருவாக்கினார். ஆனால், அவை சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றார்,” என்று குறியுள்ளார்.