சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

முனி, காளை, பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போதும் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும் பழைய தமிழ் பாடல்கள் மீது ஆர்வமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வரும் தமிழக நண்பர்களிடம் பல பழைய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை பாடினார். இளையராஜாவின் சங்கத்தில் பாடாத கவிதை பாடலை ரசித்து பாடுகிறார்.
இது குறித்து கேட்டால் "எனக்கு பழைய தமிழ் பாடல்கள் மீது தனி காதல் உண்டு, அதை ரசித்து கேட்டு பாடுகிறேன். இதைவிட எனக்கு பெருமை நான் நடித்த காவியத்தலைவன் படத்தில் என் அறிமுக காட்சியில் அருணகிரிநாதர் பாடிய ஏவினை வேல் விழி மாதரை பாடலுக்கு, பரதநாட்டியம் ஆடி நடித்ததுதான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அந்த பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். இன்றும் அந்த பாடலை முணுமுணுக்கிறேன். இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி. முனி படத்தில் நான் தான் ஹீரோயின், அந்தபடம் மூலமாகவே தமிழில் ஹாரர், காமெடி ஜானர் உருவானது. அந்த படம் சூப்பர் ஹிட். என்னை லக்கி ஹீரோயின் என லாரன்ஸ் மாஸ்டர் சொல்வார்" என்கிறார்.