இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
முனி, காளை, பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போதும் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும் பழைய தமிழ் பாடல்கள் மீது ஆர்வமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வரும் தமிழக நண்பர்களிடம் பல பழைய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை பாடினார். இளையராஜாவின் சங்கத்தில் பாடாத கவிதை பாடலை ரசித்து பாடுகிறார்.
இது குறித்து கேட்டால் "எனக்கு பழைய தமிழ் பாடல்கள் மீது தனி காதல் உண்டு, அதை ரசித்து கேட்டு பாடுகிறேன். இதைவிட எனக்கு பெருமை நான் நடித்த காவியத்தலைவன் படத்தில் என் அறிமுக காட்சியில் அருணகிரிநாதர் பாடிய ஏவினை வேல் விழி மாதரை பாடலுக்கு, பரதநாட்டியம் ஆடி நடித்ததுதான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அந்த பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். இன்றும் அந்த பாடலை முணுமுணுக்கிறேன். இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி. முனி படத்தில் நான் தான் ஹீரோயின், அந்தபடம் மூலமாகவே தமிழில் ஹாரர், காமெடி ஜானர் உருவானது. அந்த படம் சூப்பர் ஹிட். என்னை லக்கி ஹீரோயின் என லாரன்ஸ் மாஸ்டர் சொல்வார்" என்கிறார்.