கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தெலுங்கில் உருவாகி உள்ள வெப்சீரிஸ் 'யக்ஷினி'. இதில் யக்ஷினி என்ற டைட்டில் ரோலில் வேதிகா நடித்துள்ளார். அவருடன் ராகுல் விஜய், லக்ஷ்மி மஞ்சு, அஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேஜா மர்னி என்பவர் இயக்கியுள்ளார். ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இதனை காணலாம்.
குபேரனிடம் சாபம் வாங்கும் மாயா எனும் யக்ஷினி அந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் அடைய வேண்டும் என்றால் 100 ஆண்களுடன் உறவு கொண்டு பின்னர் அவர்களை கொலை செய்ய வேண்டும். 99 பேரை கொல்லும் யக்ஷினி கடைசியாக 100வது ஆளாக ஹீரோவை சந்திக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். சாப விமோசனமா, காதலா இதில் யக்ஷினி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் தொடரின் கதை.
இந்த தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வேதிகாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து வேதிகா கூறும்போது “அதிக சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கும்போது கூடுதல் பொறுப்பு இருக்கும். இந்தக் கேரக்டர் நீண்ட நேரம் உருவானாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. யக்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, எனக்கு உடல்ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேக்கப் அணிந்து கலைக்க பல மணி நேரமானது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்துக்கும் இப்போது பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.