பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த படம் 'நல்லவனுக்கு நல்லவன்'. இந்த படத்தில் 'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லன் ஆக்கியது போன்று ஒரு ஹீரோவை ரஜினிக்கு வில்லன் ஆக்குவது என்று ஏவிஎம் முடிவு செய்தது. இதற்காக தேர்வானவர் அப்போது இளம் நடிகராக வளர்ந்து வந்த கார்த்திக்.
ஏவிஎம் சரவணன், கார்த்திக்கை சந்தித்து பேசினார். 'ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஆனால் நான் வில்லனாக நடித்தால் எனது இமேஜ் போய்விடும், அதன்பிறகு வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுவார்கள்' என்று கூறி நடிக்க மறுத்தார்.
இதற்கு பதில் அளித்த சரவணன் 'அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த படத்தில் வில்லனாக நடியுங்கள், அடுத்து உங்களை ஹீரோவாக போட்டு ஒரு படம் எடுப்போம், அதை எஸ்.பி.முத்துராமனே இயக்குவார். அந்த படத்தின் கதை உங்கள் வில்லன் இமேஜை உடைப்பதாக இருக்கும்' என்றார். அதன்பிறகு கார்த்திக் நடிக்க சம்மதித்தார்.
கார்த்திக்கு கொடுத்த வாக்குறுதிக்காக கார்த்திக் நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான படம் 'நல்லதம்பி'. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்தார்.