நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் வருகிற மே மாதம் 4, 5ம் தேதிகளில் தி பிக் பாலிவுட் ஒன் என்ற நிகழ்ச்சியை இங்கிலாந்தில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் வருண் தவான், மாதிரி தீட்சித், டைகர் ஷெராப், கிர்த்தி சனோன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க இருந்தார்கள். ஆனால் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருக்கிறார் சல்மான் கான்.
இது குறித்து இந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் துயரமான சம்பவம் நடைபெற்றிருக்கும்போது, இதுபோன்ற ஆடம்பர நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது தான் சரியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். என்றாலும் இது நாம் மகிழ்ச்சியை கொண்டாட உகந்த நேரம் இது அல்ல என்பதினால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சல்மான் கான்.