பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
ஓதுவார்கள் ஆன்மிக குருக்கள், கோயில்களுக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த ஆண்டாளின் பெருமையை சாதாரண மக்களுக்கும் சொன்ன படம் 'ஸ்ரீ ஆண்டாள்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் யு.ஆர். ஜீவரத்னம் ஆண்டாளாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 20.
பி.எஸ். கோவிந்தன் ஆண்டாளின் தந்தையாக நடித்தார். இவர்கள் தவிர, 'வித்வான்' சீனிவாசன், எஸ்.டி. சுப்பையா, 'குமாரி' செல்வம், காளி என்.ரத்தினம், பி.கே. மாதவன், வி.எம். ஏழுமலை, 'கோட்டப்புலி' ஜெயராமன், எஸ்.கே. ராமராஜ், பி.எஸ். ஞானம், எம்.இ.மாதவன், ஜி.ஆர். ஸ்ரீராமுலு, எம்.கே. கமலம், எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஜி.சவுதாமினி ஆகியோரும் நடித்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்தார்.
ஆனால் அதற்கு முன்பு அதாவது 1937ம் ஆண்டு ஆண்டாளின் கதை திரைப்படமாக வெளியானது. பிரபல தேவாரப் பாடகர் சுந்தர ஓதுவார் மூர்த்தி ஆண்டாளின் தந்தையாக நடித்தார். ஆண்டாளாக நடித்தது யார் என்பது உள்ளிட்ட வேறு எந்த தகவலும் இந்த படம் தொடர்பாக கிடைக்கவில்லை. அதனால் 'ஸ்ரீ ஆண்டாள்' படமே ஆண்டாளின் பெருமை பேசும் முதல் படமாக பதிவாகிறது. இந்தப் படங்களின் பிரிண்டுகளுமே இப்பொழுது இல்லை.