புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் நடிப்பில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் விடாமுயற்சி, இந்த மாதம் குட் பேட் அக்லி என இதுவரை இல்லாத அதிசயமாக ஒரே வருடத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின. இதில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓரளவு வசூல் ரீதியாக வெற்றி பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் அஜித் வழக்கம் போல தனது கார் ரேஸ் பயணங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இவற்றை தவிர பெரிதாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத அஜித் நேற்று திடீரென சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தினருடன் கண்டுகளித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நேற்றுமுன்தினம் தான் அஜித் ஷாலினியின் 25வது திருமண நாள் நிகழ்வு என்பதால் அந்த உற்சாகத்துடன் தனது மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் ரசிக்க அஜித் வந்துள்ளார் என்றே தெரிகிறது. இதே போட்டியை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன், அஜித்தை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் அஜித்துடன் அமர்ந்து கிரிகெட் போட்டியை கண்டு ரசித்தார். எப்போதும் நரைத்த தலைமுடியுடனேயே வெளி இடங்களுக்கு வந்து செல்லும் அஜித் நேற்று தலைமுடிக்கு டை அடித்து இருந்தார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.