தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி | கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே | 'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி திருமணம்; மலையாள இயக்குனர் தேவனை கரம்பிடித்தார் | மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் |

கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் இயக்குனர் பிரசாந்த் நீல். அது மட்டுமல்ல கடந்த வருடம் தெலுங்கில் பிரபாஸை வைத்து அவர் இயக்கிய சலார் திரைப்படமும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தையும் பிரசாந்த் நீல் இயக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சலார் படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். தற்போது ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்திலும் ஸ்ருதிஹாசன் இடம் பெறுகிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆதனால் இந்த படத்தில் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறாராம் ஸ்ருதிஹாசன். சலார் படத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைத்த அந்த நட்புக்காக இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அவர் சம்மதித்து உள்ளாராம். இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.