மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில், தற்போது வசி என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த வாரத்தில் திருமணம் செய்து கொண்டார். தனக்கு இரண்டாவது திருமணம் நடந்த புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''திருமணத்திற்கு பிறகு ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோசமாக இருக்கிறேன். காதல் கணவருடன் வாழ்க்கை ரொம்ப ஜாலியாக உள்ளது. மேலும், வாழ்க்கை என்பது சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். முதலில் நண்பர்களாக பழக வேண்டும். அந்த ரிலேஷன்ஷிப்பில் நல்லதொரு நட்பு இருந்தால் அதில் எப்போதுமே ஒரு அழகான காதல் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கையில் நல்லதொரு பீலிங் இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா.