சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில், தற்போது வசி என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த வாரத்தில் திருமணம் செய்து கொண்டார். தனக்கு இரண்டாவது திருமணம் நடந்த புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''திருமணத்திற்கு பிறகு ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோசமாக இருக்கிறேன். காதல் கணவருடன் வாழ்க்கை ரொம்ப ஜாலியாக உள்ளது. மேலும், வாழ்க்கை என்பது சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். முதலில் நண்பர்களாக பழக வேண்டும். அந்த ரிலேஷன்ஷிப்பில் நல்லதொரு நட்பு இருந்தால் அதில் எப்போதுமே ஒரு அழகான காதல் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கையில் நல்லதொரு பீலிங் இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா.