பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

தமிழ் சினிமாவில் தமிழ் படங்களை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாவதே இப்போது வழக்கமாக உள்ளது. ஆனால் வட இந்திய படங்களை பொறுத்தவரை 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு 4 வாரத்திலே படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் திரையரங்குகளில் வரும் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இது சம்பந்தமாக பலமுறை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தே வந்தது. இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் சமீபத்தில் இது சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஒரு சிறப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் இனிமேல் 8 வாரங்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே இனிமேல் திரையரங்கில் வெளியாகும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியதாகவும், இந்த நடைமுறை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறையில் வரவேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்கள் 5 நாட்கள் கால அவகாசம் கேட்டதாகவும், மேற்படி என்ன செய்யலாம் என்ற யோசனையில் தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படமா, இதேபோல் இன்னும் இழுபறி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையால் திரையரங்க உரிமையாளர்களுக்கு சுமூகமான முடிவு வந்தால் ஓடிடி நிறுவனங்களுக்கு விற்கும் படங்களின் உரிமை தொகை என்னவாகும், 8 வாரங்கள் கழித்து வெளியானால் பார்வையாளர்களை ஈர்க்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.




