நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா |

2015ம் ஆண்டில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பிறகு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி' போன்ற படங்களை இயக்கியவர், கடைசியாக அஜித் நடிப்பில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தை இயக்கினார். கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் 100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அஜித்குமார் இப்படத்தில் கேங்ஸ்டராக செம மாஸ் காட்டி நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் வெற்றி செய்தியை அஜித்துக்கு தெரியப்படுத்திய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அவர் ஒரு முக்கிய அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அது குறித்து அவர் கூறுகையில், ''குட் பேட் அக்லி படம் ஹிட் ஆயிடுச்சு. பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கப் போகிறது. என்றாலும் இது அத்தனையும் மறந்து விடு. வெற்றியை தலையில் ஏற்றி கொள்ளாதே. அதே மாதிரி தோல்வியை உன் வீட்டுக்கு எடுத்து செல்லாதே. எல்லாத்தையும் மறந்து விட்டு அடுத்த வேலையை பாரு'' என்று தனக்கு அஜித்குமார் அட்வைஸ் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.