Advertisement

சிறப்புச்செய்திகள்

இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர்

15 ஏப், 2025 - 10:19 IST
எழுத்தின் அளவு:
3-films-in-one-day-The-villain-actor-was-wasted-in-all-three


மலையாளத்தில் குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் ஷைன் டாம் சாக்கோ. நடிப்புக்காக மட்டுமல்லாமல் அவ்வப்போது சர்ச்சையாக கொடுக்கும் பேட்டிகள் மூலமும் பிரபலமானவர். தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த 'தசரா' படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் இவர் தான். அதே சமயம் 'பீஸ்ட்' படத்தில் தனது கேரக்டரை டம்மி பண்ணி விட்டார்கள் என்றும் படம் குறித்தும் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் இவர், கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி தமிழில் வெளியான 'குட் பேட் அக்லி', மலையாளத்தில் வெளியான 'பஷூக்கா' மற்றும் 'ஆலப்புழா ஜிம்கானா' என மூன்று படங்களில் நடித்திருந்தார். 'குட் பேட் அக்லி'யில் இடைவேளைக்கு பின் என்ட்ரி கொடுத்து அஜித்தின் வீரதீர பராக்கிரமங்களை பற்றி புகழ் பாடுபவராக சில நிமிட காட்சிகள் மட்டும் வந்து தனது கடமையை முடித்துக் கொண்டார் ஷைன் டாம் சாக்கோ.

அதேபோல மம்முட்டியின் 'பஷூக்கா' திரைப்படத்திலும் வில்லன் கூட்டத்தில் ஒருவராக வந்தவர், நின்று விளையாடுவார் என்று பார்த்தால் சிங்கிள் ரன் எடுத்ததோடு கிளம்பிச் செல்லும் பேட்ஸ்மேன் போல ஒரே காட்சியுடன் சென்றுவிட்டார். அதேபோல தான் 'ஆலப்புழா ஜிம்கானா' படத்தில் ஹீரோ உள்ளிட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக ஒரு பிரபலம் இல்லாத நடிகர் படம் முழுவதும் வரும் வகையில் நடித்திருந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோ மல்யுத்த சண்டை நடைபெறும் களத்தில் ரெப்ரீயாக ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

இப்படி நல்ல நடிப்புத் திறமை உள்ள ஒரு நடிகரை ஒரு காட்சியில் மட்டும் வந்துபோகும் விதமாக நடிக்க வைத்து வீணடிக்கலாமா என்று ரசிகர்கள் பலர் சோசியல் மீடியாவின் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்புஹரிஷ் கல்யாண் 15வது படம் ... இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in