பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இயக்குனரும், நடிகருமான எஸ்.எஸ் ஸ்டான்லி, 58 உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்டான்லி. இயக்குனர்கள் மகேந்திரன், சசி ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல்படமே ஓரளவுக்கு அவரை பேச வைத்தது. தொடர்ந்து தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மீண்டும் ஸ்ரீகாந்தை வைத்து மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களை இயக்கினார்.
பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்தார். இயக்குனர்கள் சங்கத்திலும் சில பொறுப்புகளில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான்லி இன்று(ஏப்., 15) காலமானார்.
எஸ்.எஸ்.ஸ்டான்லியின் உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கடந்த ஞாயிறு அன்று தான் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைப்புலி ஜி சேகரன் காலமானார். அந்த சோகம் தீரும் முன்பே இப்போது இவரின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.