என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை பான் வேர்ல்டு படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால், சர்வதேச அளவில் பிரபலமான கதாநாயகிகளைப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று தேடி வருகிறார்களாம்.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவை அதற்காக அணுகி இருக்கிறார்கள். அவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருவதும் ஒரு காரணம். ஆனால், அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க 'நோ' சொல்லிவிட்டாராம்.
ராஜமவுலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு அழைக்கப்படும் நாட்களில் வர வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதனால்தான் அவர் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க 'நோ' சொன்னாராம். மேலும், ஹிந்தியில் 'க்ரிஷ் 4' படத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்லி இருக்கிறாராம் பிரியங்கா. இதனால், தேவையில்லாத சிக்கல் ஏற்பட வேண்டாம் என தவிர்த்திருக்கிறார்.
அல்லு அர்ஜுனுடன் இதற்கு முன் நடித்த நடிகைகளை ஜோடியாக்க வேண்டாம் என்று அட்லி சொல்லி வருகிறாராம். சர்வதேச பிரபல நடிகைகளைத் தேர்வு செய்வார்களா, அல்லது சமந்தா, ஜான்வி கபூர் என இந்தியப் பிரபலங்களையே தேர்வு செய்வார்களா என்பது விரைவில் தெரிய வரும்.