அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? |
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வருகிற மே ஒன்றாம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பதாவது : 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு காதல் கதை என்பதால் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம். இது எனது வழக்கமான கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆக்ஷனும் உண்டு, மகிழ்வான தருணங்களும் உண்டு.
படத்தில் சூர்யா பாரிவேல் கண்ணன் கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருகிறார். கோபம், அடிதடி என்று இலக்கு இல்லாமல் வாழும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் பொருட்டு அவன் தன்னை மாற்றிக் கொள்வதும் அந்தப் பெண்ணுக்கான ஒரு பிரச்சனை தீர்த்து வைப்பது மாதிரியான கதை. பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி.
படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது. தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஒரு தனியான தீவில் படம் ஆக்கினோம். ஒரு பகுதி படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்துள்ளது. இந்த படம் நிச்சயம் எனது மற்றும் சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்கிறார்.