ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வருகிற மே ஒன்றாம் தேதி படம் வெளிவருகிறது.
படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பதாவது : 'ரெட்ரோ' என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு காதல் கதை என்பதால் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம். இது எனது வழக்கமான கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆக்ஷனும் உண்டு, மகிழ்வான தருணங்களும் உண்டு.
படத்தில் சூர்யா பாரிவேல் கண்ணன் கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருகிறார். கோபம், அடிதடி என்று இலக்கு இல்லாமல் வாழும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் பொருட்டு அவன் தன்னை மாற்றிக் கொள்வதும் அந்தப் பெண்ணுக்கான ஒரு பிரச்சனை தீர்த்து வைப்பது மாதிரியான கதை. பூஜாவின் கேரக்டர் பெயர் ருக்மணி.
படத்தின் பெரும்பாலான கதை அந்தமானில் நடக்கிறது. தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஒரு தனியான தீவில் படம் ஆக்கினோம். ஒரு பகுதி படப்பிடிப்பு வாரணாசியிலும் நடந்துள்ளது. இந்த படம் நிச்சயம் எனது மற்றும் சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்கிறார்.