Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி

09 ஏப், 2025 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Why-did-he-raise-his-voice-against-Jayalalithaa-Rajinikanth-reveals-the-reason-after-30-years


எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஏப்.,9). அதையொட்டி அவரது சத்யா மூவிஸ் நிறுவனம், ஆர்.எம். வீரப்பன் பற்றிய நினைவுகளை குறிப்பிடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை பற்றி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி. 1995ல் வெளியான பாட்ஷா பட வெற்றி விழாவில் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியதால் அவர் பதவி போனது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச இந்த காரணம் முக்கியமானது. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

'பாட்ஷா' 100வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன். அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் எப்படி சும்மா இருக்க முடியும் என்று சொல்லி வீரப்பனை பதவியில் இருந்து தூக்கிவிட்டார்.

அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால் தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலவில்லை. போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. மறுநாள் காலையில் நேரில் போய் 'ஸாரி சார்; என்னால தான் ஆனது' என்று சொன்னேன். அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. 'அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங்' என்று சாதாரணமாக கேட்டார்.

எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. ஏனென்றால் நான் தான் கடைசியாக பேசினது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது. அதன்பிறகு சில நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவிடம் இதுப்பற்றி பேசுவதாக சொன்னபோதும், 'அதெல்லாம் வேண்டாம், அவர் முடிவெடுத்தால் மாற்றமாட்டார். நீங்கள் பேசி உங்களுடைய மரியாதையையும் இழக்க வேண்டாம்; நீங்கள் சொல்லி நான் அங்கு சேர வேண்டிய அவசியமும் இல்லை; இதை விட்டுவிடுங்கள்' என்றார். இவ்வாறு ரஜினி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசுபிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ... எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா எங்களுக்குள்ளும் சண்டை வரும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in