மகனுக்காக இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா : ரஜினியின் நெகிழ்ச்சி பதிவு | கோமாதா என் குலமாதா, பாகுபலி 2, கட்டா குஸ்தி : ஞாயிறு திரைப்படங்கள் | தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் |
எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஏப்.,9). அதையொட்டி அவரது சத்யா மூவிஸ் நிறுவனம், ஆர்.எம். வீரப்பன் பற்றிய நினைவுகளை குறிப்பிடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை பற்றி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவது ரொம்ப மகிழ்ச்சி. 1995ல் வெளியான பாட்ஷா பட வெற்றி விழாவில் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில், வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியதால் அவர் பதவி போனது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேச இந்த காரணம் முக்கியமானது. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
'பாட்ஷா' 100வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினேன். அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் எப்படி சும்மா இருக்க முடியும் என்று சொல்லி வீரப்பனை பதவியில் இருந்து தூக்கிவிட்டார்.
அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால் தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலவில்லை. போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. மறுநாள் காலையில் நேரில் போய் 'ஸாரி சார்; என்னால தான் ஆனது' என்று சொன்னேன். அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. 'அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங்' என்று சாதாரணமாக கேட்டார்.
எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. ஏனென்றால் நான் தான் கடைசியாக பேசினது. நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது. அதன்பிறகு சில நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவிடம் இதுப்பற்றி பேசுவதாக சொன்னபோதும், 'அதெல்லாம் வேண்டாம், அவர் முடிவெடுத்தால் மாற்றமாட்டார். நீங்கள் பேசி உங்களுடைய மரியாதையையும் இழக்க வேண்டாம்; நீங்கள் சொல்லி நான் அங்கு சேர வேண்டிய அவசியமும் இல்லை; இதை விட்டுவிடுங்கள்' என்றார். இவ்வாறு ரஜினி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.