Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம்

08 ஏப், 2025 - 01:41 IST
எழுத்தின் அளவு:
Why-did-you-leave-Chennai-Sasikumar-explains

'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் சசிகுமார். குழந்தைத்தனமான முகத்தோற்றம், மதுரை தமிழ் என கவனிக்க வைத்தார். 'நாடோடிகள்' படத்திற்கு பிறகு 'நட்புக்காக' இமேஜும் சேர்ந்து கொண்டது. சில சொந்த படங்கள் தயாரித்த வகையில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார். அந்த நேரத்தில் கொரோனா தொற்றும் வந்ததால் சென்னையை காலி செய்து விட்டு மதுரையிலேயே குடியேறி விட்டார்.

தற்போது அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மதுரையிலேயே குடியிருக்கிறார். படப்பிடிப்பு எங்கே என்று சொன்னால் மதுரையில் இருந்து நேராக அங்கு வந்து விடுவார் படப்பிடிப்பு முடிந்ததும் மதுரை திரும்பி விடுவார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு மலையாளப் படத்தில் நடித்தேன். அப்போது மலையாள நடிகர்களை கவனித்தேன். எல்லோருமே அவரவர் சொந்த ஊரில் இருந்து நடிக்க வருகிறார்கள், படப்பிடிப்பு முடிந்ததும் சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார்கள். சொந்த ஊரில் விவசாயியாக, வியாபாரியாக, சமூக சேவகராக இன்னொரு முகத்துடன் வாழ்கிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பிறகு ஏன் நாம் மட்டும் சென்னையிலேயே இருக்கிறோம், நம்ம மண், நம்ம ஊர் என்று கிராமத்திலேயே வாழத் தோன்றியது. சினிமாவை வீட்டுக்குக் கொண்டு வருவதில்லை. இங்கே சினிமா சம்பந்தமாக யாரையும் சந்திக்கிறதில்லை. ஷூட்டிங் இல்லையென்றால் விவசாயம் செய்து கொண்டு கிராமத்து ஆள் மாதிரியே இருக்கிறேன்.

எங்க ஊரில் யாரும் என்னோடு செல்பி எடுத்துக் கொள்வதில்லை. ரோட்டில் நடந்து கடைக்குப் போவேன். சைக்கிளில் போவேன். வீட்டுக்கு வெளியே நிற்கிறேன். என்னை மாமா, மச்சான்னு கூப்பிட்டுப் பேசுறாங்க. சினிமா நிரந்தரம் இல்லை . சினிமா ஆண்டாண்டு காலமாக அப்படியே அழியாமல் இருக்கும். ஆனால் சினிமாவுக்கு வருகிற நடிகர்கள் ஒவ்வொரு தடவையும் மாறிக்கிட்டே இருக்காங்க.

சினிமாவிற்கு வருகிற யாரும் நிரந்தரம் இல்லை. சினிமாக்காரனா பெரிய ஆளுன்னு நினைத்துத் தலைக்கனம் வந்திடாமல் இருக்க இந்த வாழ்க்கை உதவுகிறது. கிராமத்து மக்களும் என்னை ஒரு சாதாரண ஆளாக இருக்கவிடுறாங்க. இந்த அமைதியை, கூட்டுக் குடும்பமாக இருக்கிறதைத் தொலைக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்.

இவ்வாறு சசிகுமார் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்'தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர ... ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
10 ஏப், 2025 - 06:04 Report Abuse
N Annamalai அருமை .ஊரில் செலவு செய்ய முடியும் .பணம் ஊருக்குள் சுற்றும் .சென்னையில் பணம் எவ்வளவு இருந்தால் அவ்வளவு மரியாதை .தரமான நடிகர் அவர் தரத்திற்கு ஏற்ற முடிவு .ஒரு நாள் உங்களுடன் தேனீர் அருந்துவேன் மதுரையில் .
Rate this:
S.V.Srinivasan - Chennai,இந்தியா
09 ஏப், 2025 - 11:04 Report Abuse
S.V.Srinivasan நல்ல முடிவு.
Rate this:
Premanathan S - Cuddalore,இந்தியா
09 ஏப், 2025 - 09:04 Report Abuse
Premanathan S நல்ல முடிவு பாராட்டுக்கள்
Rate this:
Kayd -  ( Posted via: Dinamalar Android App )
09 ஏப், 2025 - 02:04 Report Abuse
Kayd உங்களை முன்பு விட இப்போ கொஞ்சம் பெட்டர் aa பிடிக்க ஆரம்பித்து விட்டது..
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2025 - 11:04 Report Abuse
BalaG அருமை
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in