நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்து சங்கராந்திக்கு வெளிவந்த 'கேம் சேஞ்சர்' படம் 400 கோடி ரூபாய் செலவில் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் வசூல் 150 கோடி மட்டுமே என்றார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் ராம் சரணுக்கு எதிர்பாராத தோல்வியைத் தந்து அதிர்ச்சியடைய வைத்தது.
இருந்தாலும் அதில் விட்டதை 'பெத்தி' படத்தில் ராம் சரண் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதற்கு சாட்சியாக நேற்று வெளியான 'க்ளிம்ப்ஸ்' எனும் முன்னோட்டவீடியோ நிரூபித்துள்ளது.
வெளியான 24 மணி நேரத்தில் யு டியுபில் மட்டுமே தெலுங்கு க்ளிம்ப்ஸ் 36.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் யஷ் நடித்து வரும் 'டாக்சிக்' படத்தின் 24 மணி நேர க்ளிம்ப்ஸ் சாதனையை 'பெத்தி' முறியடித்துள்ளது. 'டாக்சிக்' படம் 31.5 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்றிருந்தது.
'வேர் இஸ் புஷ்பா' ஹிந்தி க்ளிம்ப்ஸ் 27.6 மில்லியன், 'தேவரா' 26.1 மில்லியன், 'குண்டூர் காரம்' 20.9 மில்லியன், 'வேர் இஸ் புஷ்பா' தெலுங்கு க்ளிம்ப்ஸ் 20.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
ஏஆர் ரஹ்மானின் அசத்தலான பின்னணி இசை, ரத்தினவேலுவின் அற்புதமான ஒளிப்பதிவு, புச்சி பாபு சனாவில் அதிரடியான இயக்கம், ராம் சரணின் வித்தியாசமான தோற்றம் ஆகியவைதான் 'பெத்தி' பட க்ளிம்ப்ஸ் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெறக் காரணம் என விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.
வழக்கமான பிரம்மாண்டம் தேவையில்லை, புதிதாக ஏதாவது ஒன்று வேண்டும், அதை வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என ரசிகர்கள் சில இயக்குனர்களுக்கு இதன் மூலம் வெளிப்படுத்துவதாகவே நாம் அர்த்தம் கொள்ள வேண்டும்.