மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக பதிவாகி வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7.30 மணி காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது.
அதேசமயம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்று அண்டை மாநிலங்களில் முன்கூட்டியே காட்சிகள் திரையிடப்பட்டால், ஒருவேளை தமிழகத்தில் படம் திரையிடுவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் யாரேனும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி விட்டால், அது படத்தின் வசூலை பாதிக்கும். அதன் காரணமாகவே தமிழகத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருப்பதால், இதே காலை 9 மணிக்குதான் மற்ற அண்டை மாநிலங்களிலும் முதல் காட்சியை திரையிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.