டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக பதிவாகி வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7.30 மணி காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது.
அதேசமயம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்று அண்டை மாநிலங்களில் முன்கூட்டியே காட்சிகள் திரையிடப்பட்டால், ஒருவேளை தமிழகத்தில் படம் திரையிடுவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் யாரேனும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி விட்டால், அது படத்தின் வசூலை பாதிக்கும். அதன் காரணமாகவே தமிழகத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருப்பதால், இதே காலை 9 மணிக்குதான் மற்ற அண்டை மாநிலங்களிலும் முதல் காட்சியை திரையிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.




