கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காக்களில் ஒரு நாள் படப்பிடிப்பு கட்டணமாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போது மக்கள் அதிகமாக இந்த பூங்காக்களுக்கு வருவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அந்த காலகட்டத்தில் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்படும்.
அந்த வகையில் இன்று (ஏப் 1)) முதல் ஜூன் 30ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரியில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.