ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
அதர்வா நடித்த ஈட்டி, ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கியவர் ரவி அரசு. அதன் பின்னர் சிவராஜ் குமாரை வைத்து 'ஜாவா' என்ற படத்தை இவர் இயக்கவிருத்தார். ஆனால் சிவராஜ் குமாரின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனால் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கினார். அதன்படி நடிகர் விஷாலிடம் ஒரு கதை சொல்லி ஓகே பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளது. இதை விஷாலே அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.
சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். கடந்தவாரம் விக்ரம் உடன் இவர் நடித்த வீர தீர சூரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது விஷால் உடன் இணைந்து நடிக்க போகிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.