மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீப காலமாக மலையாளத்தையும் தாண்டி தமிழில் முக்கியமான இயக்குனர்களின் படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை சம்பாதித்து உள்ள இவருக்கு ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே தான் வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‛எம்புரான்' படத்தில் மஞ்சுவாரியரும் நடித்துள்ளார். இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒரு பகுதியாக சில சேனல்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார் மஞ்சு வாரியர். அப்போது அவரிடம் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர் கூறும்போது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். அதுதான் நான்.. குறிப்பாக கேரளாவில் யார் ஒருவருக்கும் நான் அந்நியமானவள் அல்ல. எந்த நேரத்திலும் அது இரவோ பகலோ எந்த வீட்டுக் கதவையும் என்னால் தட்டி ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கள் என வாங்கி குடிக்க முடியும். அவர்களும் ஏனென்று கேள்வி கேட்காமல் எனக்கு கொடுப்பார்கள். இவள் வந்து எதற்காக நம்மிடம் கேட்கிறாள் என அவர்கள் சந்தேகம் கூட பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.