கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீப காலமாக மலையாளத்தையும் தாண்டி தமிழில் முக்கியமான இயக்குனர்களின் படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை சம்பாதித்து உள்ள இவருக்கு ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே தான் வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‛எம்புரான்' படத்தில் மஞ்சுவாரியரும் நடித்துள்ளார். இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒரு பகுதியாக சில சேனல்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார் மஞ்சு வாரியர். அப்போது அவரிடம் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர் கூறும்போது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். அதுதான் நான்.. குறிப்பாக கேரளாவில் யார் ஒருவருக்கும் நான் அந்நியமானவள் அல்ல. எந்த நேரத்திலும் அது இரவோ பகலோ எந்த வீட்டுக் கதவையும் என்னால் தட்டி ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கள் என வாங்கி குடிக்க முடியும். அவர்களும் ஏனென்று கேள்வி கேட்காமல் எனக்கு கொடுப்பார்கள். இவள் வந்து எதற்காக நம்மிடம் கேட்கிறாள் என அவர்கள் சந்தேகம் கூட பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.