சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமீப காலமாக மலையாளத்தையும் தாண்டி தமிழில் முக்கியமான இயக்குனர்களின் படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை சம்பாதித்து உள்ள இவருக்கு ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே தான் வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‛எம்புரான்' படத்தில் மஞ்சுவாரியரும் நடித்துள்ளார். இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒரு பகுதியாக சில சேனல்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார் மஞ்சு வாரியர். அப்போது அவரிடம் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர் கூறும்போது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். அதுதான் நான்.. குறிப்பாக கேரளாவில் யார் ஒருவருக்கும் நான் அந்நியமானவள் அல்ல. எந்த நேரத்திலும் அது இரவோ பகலோ எந்த வீட்டுக் கதவையும் என்னால் தட்டி ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கள் என வாங்கி குடிக்க முடியும். அவர்களும் ஏனென்று கேள்வி கேட்காமல் எனக்கு கொடுப்பார்கள். இவள் வந்து எதற்காக நம்மிடம் கேட்கிறாள் என அவர்கள் சந்தேகம் கூட பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.