கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்தி வருகின்றனர். சில நட்சத்திர தம்பதிகளை போல இவர்களுக்கும் கருத்து வேறுபாடு, பிரிவு என்பது போன்று சில வதந்திகள் அவ்வப்போது வெளியானாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதர்ச தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்ற இவர்கள் அங்கிருந்து கிரிவலம் பாதையில் வலம் வந்துள்ளனர்.
அதேசமயம் அப்படி அவர்கள் கிரிவல பாதையில் நடந்த போது கால்களில் செருப்பு அணிந்து நடந்து சென்றதும் செருப்பை அணிந்தபடியே அங்கே தேங்காய் உடைத்தது, பிரார்த்தனை செய்தது என அவர்கள் நடந்து கொண்டதும் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இப்படி புனித தலமான திருவண்ணாமலைய கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.