கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி |
சென்னை : என் ஹார்ட் டிஸ்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேனு சொல்கிறார்கள் எனக் கூறி சென்னையில், பெப்சி அலுவலகம் முன் நடிகை சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா ஹெய்டன். கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் ஏராளமான நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ஜெய் நடித்த ‛கனிமொழி' என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றை தழுவி 'ஸ்மோக்' என்ற வெப்சீரிஸை இயக்கினார். ஆனால் இந்த வெப் சீரிஸை தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது என்று பலர் தன்னை மிரட்டி வருவதாக சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில் பெப்சி அலுவலகம் முன்பு சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள். எங்களிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் ரூ.8 லட்சம் வரை என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுபற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு பெப்சியிடம் முறையிட்டு இருந்தேன். இது நம்ம குடும்பமாச்சே நமக்கு உதவுவார்கள் என்று இருந்தேன். ஆனால் இதுவரை உதவவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு என் ஹார்ட் டிஸ்க், எனது பணம் வர வேண்டும். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும் தினமும் வந்து நான் போராடுவேன்''.
இவ்வாறு சோனா தெரிவித்துள்ளார்.