தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஜுன் 20ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேகர் கம்முலா, “குபேரா' படத்தை இயக்குவதில் பெருமையாக உணர்கிறேன். படத்தின் கதை தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற நடிகர்களைக் கேட்டது. படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் நான் எந்த விதமான மெசேஜும் சொல்வதில்லை. அதேசமயம் நாட்டில் உள்ள சமுதாயக் கட்டமைப்பை எனது படங்கள் பாதிக்காத அளவில்தான் இருக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் இதை மனதில் வைத்தே கதை எழுதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
'குபேரா' படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது, நிச்சயம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.