ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஜுன் 20ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேகர் கம்முலா, “குபேரா' படத்தை இயக்குவதில் பெருமையாக உணர்கிறேன். படத்தின் கதை தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற நடிகர்களைக் கேட்டது. படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் நான் எந்த விதமான மெசேஜும் சொல்வதில்லை. அதேசமயம் நாட்டில் உள்ள சமுதாயக் கட்டமைப்பை எனது படங்கள் பாதிக்காத அளவில்தான் இருக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் இதை மனதில் வைத்தே கதை எழுதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
'குபேரா' படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது, நிச்சயம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.