சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஜுன் 20ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேகர் கம்முலா, “குபேரா' படத்தை இயக்குவதில் பெருமையாக உணர்கிறேன். படத்தின் கதை தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற நடிகர்களைக் கேட்டது. படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் நான் எந்த விதமான மெசேஜும் சொல்வதில்லை. அதேசமயம் நாட்டில் உள்ள சமுதாயக் கட்டமைப்பை எனது படங்கள் பாதிக்காத அளவில்தான் இருக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் இதை மனதில் வைத்தே கதை எழுதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
'குபேரா' படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது, நிச்சயம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.