கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தியேட்டர்களில் படம் ஓடுகிறதோ... இல்லையோ... ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 அல்லது 6 படங்களாவது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இரண்டரை மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டது. இந்த வாரம் மார்ச் 21ல் வெளியான படங்களின் நிலைமை என்ன என்று பார்ப்போம்.
அஸ்திரம் : அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடித்து திரைக்கு வந்துள்ள படம் அஸ்திரம். தமிழகம் முழுவதும் சுமார் 200 திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் சுமாரான வசூலை மட்டுமே பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதே உண்மை.
எனை சுடும் பனி : ராம் சேவா இயக்கத்தில் நட்ராஜ், பாக்யராஜ், சிங்கம் புலி, உபாசனா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் சுமார் 70 அரங்கம் வரை வெளியானது. பல அரங்கில் பார்க்க ஆளே இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்ராமா : தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி மற்றும் பலர் நடித்த இந்த படத்துக்கு சராசரியான படம் என்ற விமர்சனம் கிடைத்துள்ளது. இருந்தாலும் வசூல் ரீதியாக பார்க்கும்போது பெரிதளவில் இல்லை என்பதே உண்மை.
பேய் கொட்டு : லாவண்யா இயக்கத்தில் தீபா ஷங்கர், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்த இந்த படம் பெரிதாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.
ஆக மொத்தம் இந்தவாரம் வெளியான 4 படங்களில் ஷாமின் அஸ்திரம் மட்டுமே நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் அதுவும் வசூலை குவிக்குமா என்பது சந்தேகமே...!