35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 18வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி இன்று(மார்ச் 22) மாலை கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறும் 13 மைதானங்களிலும் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் டைபெறும் லீக் ஆட்டத்திற்கு முன்பு மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாடல்களை பாடுவதுடன் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடுகிறார்.