தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்துக்கள் அனுசரிக்கும் விரதங்களில் முக்கியமானது 'ஏகாதசி விரதம்'. இதனை வலியுறுத்தி 'ருக்மாங்கதன்' என்ற படம் வெளியானது. ஏகாதசி விரதம் குறித்து பல புராண கதைகள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது நாரதர் புராணத்தில் சொல்லப்படும் கதை. அந்த கதையையைத்தான் படமாக எடுத்தார்கள்.
1947ல் வெளிவந்த இந்தப் படத்தில் ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.ஆர்.ராமச்சந்திரன், சி.நாராயணராவ், மங்களம், பி.ஏ.பெரியநாயகி, சி.டி.ராஜகாந்தம், பி.ஏ.ராஜாமணி ஆகியோர் நடித்தனர். ராமநாதன் இசைக்கு பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதினார். பி.எஸ்.வி.ஐயர் தயாரித்து, இயக்கி இருந்தார்.
சூர்யவம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வருகிறான். குறிப்பாக குடிமக்கள் விரதங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். நாட்டில் எல்லோருமே ஏதாதசி விரத்தை கடைபிடிப்பதால் எல்லோரும் நேரடியாக சொர்கத்துக்கு சென்று விடுகிறார்கள். இதனால் எமதர்மராஜனுக்கு வேலை குறைகிறது. இது குறித்து இந்திரனிடம் எமன் புகார் சொல்ல மோகினி என்ற அழகியை இந்திரன் பூமிக்கு அனுப்பி ருக்மாங்தன் விரத்தை கலைத்து வருமாறு கட்டளையிடுகிறான்.
ஆனால் மோகினியால் மன்னனை மயக்கி அவன் விரதத்தை கலைக்க முடியவில்லை. இட்ட கட்டளையை நிறைவேற்றாமல் போனால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று மோகினி மன்னனிடம் புலம்ப என்ன வேண்டுமானாலும் கேள் ஆனால் விரதத்தை கைவிட மாட்டேன் என்கிறான் மன்னன். மோகினியோ உங்கள் மகனின் உயிரைத் தர முடியுமா? என்று கேட்கிறாள். சற்றும் யோசிக்காத மன்னன் தன் வாளால் மகனை கொல்ல முயற்சிக்கும்போது தேவர்கள் வானில் தோன்றி மன்னா உன் விரத வைராக்கியத்தை பரிசோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தினோம். என்கிறார்கள்.
இந்த படத்திற்கு பிறகு ஏகாதசி விரதம் பிரபலமடைந்து பொதுமக்களும் ஏதாகசி விரதம் அனுசரிக்கத் தொடங்கினார்கள்.